Thursday, June 14, 2007

இரகசிய சினேகிதிக்காக(அல்ல)

விழிப்பிலும் உறக்கத்திலும்
உணவிலும் உரையாடலிலும்
சிந்தையிலும் செயலிலும்
எப்பொழுதும் சுஜாதா
எதற்கு நான்?
கோபமாய் கேட்டாள்
அனிதா இளம்மனைவி*
புத்தகத்தை பிடுங்கி
எறிந்த என்னவள்!

பி.கு
எழுத்தாளர் சுஜாதா எழுதிய ஒரு நாவலின் பெயர்,அனிதா இளம் மனைவி.

No comments: