Tuesday, February 26, 2008

இரகசிய சினேகிதிக்காக

வாழ்த்தி வழி
அனுப்பாத வலி

சேர்ந்தாயா செத்தாயா
கேக்காத சோகம்

நலமா நாசமா
விசாரிக்காத வருத்தம்

குரல்கேளா கஷ்டம்
பார்வைப்படா பஞ்சம்

அவஸ்தைகள் அனைத்தும்
பஞ்சாய் பறந்தது

எப்படி இருக்கிறாய்?
எப்பொழுது வந்தாய்?

பாவை பகர்ந்த
பரிவான வார்த்தைகளில்

No comments: