Saturday, June 27, 2009

ஊருக்கெல்லாம் உபதேசம் சொல்லுமாம் பல்லி

யாரெனும் மிக கஷ்டம் என்று உங்களிடம் வழி கேட்டு வருகிறார்களா? பிரச்னை என்று உங்களை நம்பி வருகிறார்களா?இதை எப்படி செய்வது, அதை அப்படி செய்வது என்று ஆலோசனை கேட்பார்களா?

அவர்களுக்கு எல்லாம் மிக வக்கணையாக மிக நன்றாக பதில், அறிவுரை, பஞ்ச் டயலாக் எல்லாம் எடுத்து விடுவீர்களா? இனி அதை எல்லாம் பதிவு செய்து வைத்துக் கொள்ளுங்கள், அல்லது எழுதி வைத்துக் கொள்ளுங்கள்.

மிக நல்ல யோசனை, எல்லாருக்கும் சொன்னதையே திருப்பி சொல்ல வேண்டியதில்லை. படிக்க சொல்லலாம் அல்லது பதிவு செய்ததை போட்டுக் காட்டலாம்,வேலை மிச்சம் என்று எல்லாம் சொல்ல வரவில்லை.

அப்படி எழுதி வைத்தால், சுய முன்னேற்ற புத்தகம் எழுதின மாதிரி இருக்கும் என்றும் சொல்ல வரவில்லை.

உங்களுக்கு ஒரு கஷ்டம், பிரச்னை, மனக்குழப்பம் வரும் போது, என்ன செய்வது, யாரைக் கேட்பது என்று எல்லாம் மண்டையைப் பிய்த்துக் கொள்ள வேண்டாம்.

நாம் மற்றவருக்கு சொன்னதை மீண்டும் நினைவு படுத்திக் கொண்டால் போதும். தன் சொல்லே தனக்கு உதவியாய் இருக்கும்.

No comments: