Saturday, November 27, 2010

My Prayer and Penance

Nothing lasts forever. Life is too short. Hence there is no point harboring anger or hatred or animosity or enmity.

I am aware of the above fact as much as I am aware that I am just human.

Still,

I am too judgmental.
I am too critical.
I even hate some people. Mere mention of the name or the thought is more than enough to raise the mercury too high. It would be too hard to believe, most of the times the hate is not personal. Yes I end up hating people whom i have hardly dealt with personally.

In my so called short life, have come across too many several instances where my anger and hatred had made me feel ashamed and embarrassed.

If I had been the good cow, I would have learn't from the very first instance and there wouldn't have been several instances.

Wish GOD would bless me with the heart that would LOVE ALL even if i cant SERVE ALL.
A mind that would NEVER HURT, even it can't HELP EVER.

Friday, November 26, 2010

ஓய் ஓய்

காலையில் படுக்கையை விட்டு எழும் போது யாரெனும் அவ்வளவு பிரெஷ்ஷாக இருப்பார்களா எனத் தெரியவில்லை ஹீரோயினாக நடிக்கும் முதல் படத்தின் முதல் காட்சியில் ஷாமிலி தெரிகிறார்.அப்படி ஒரு மேக்கப். மேக்கப்புக்கு மட்டும் பேக்கப் சொல்வாரெனில் அனுஷ்காவை அம்போவென விடவும் ஷாமிலிக்கு சிம்மாசனமும் போட நான் ரெடி!

எதிரும் புதிருமான சித்தார்த்தும் ஷாமிலியும் தொலைபேசியில் பேசும் ஆரம்ப காட்சியைப் பார்த்து அளவிலா ஆர்வம் கொண்டு அகப்பட்டேன் நான்..அந்தோ பரிதாபம்! வழக்கமான காதல் வில்லனாய் கேன்சர் என வீணாய்ப் போன கதை பாழாய்ப் போன நேரம்!

சைல்ட் ஆர்ட்டிஸ்ட் என்றும், அஞ்சலி அஞ்சலி என ஷாமிலியைக் கலாய்ப்பது, கடியான காமெடியைக் கூட கதையோடு கலப்பது, தந்தையின் சாவிலும் கண் கலங்காமல் கிண்டல் பேச்சு பேசும் சித்தார்த் ஷாமிலிக்கு கேன்சர் என்றவுடனே கதறுவது பர்த் டே கிப்ட் கொடுக்கும் காட்சியை கிளைமாக்ஸில் மீண்டும் கனெகட் செய்வது என சிறப்பான சமாச்சாரங்கள் படத்தில் சில உண்டு. நெப்பொலியன், வினாயக்கடு படத்தின் ஹீரோ இவர்களோடு சித்தார்த்தின் ஐடியா பிரமொஷனும் அவ்வப்பொழுது படத்தில் உண்டு.[அதுவும் ஒரே நேரத்தில் இரண்டு இடத்தில் இருக்க வேண்டும் என்ற ஷாமிலியின் ஆசையை நிறைவேற்று ஐடியா மூலம் ஐடியா வருவது எல்லாம் உண்மையிலேயே செம ஐடியா தான்!

இரண்டு குழந்தைகளுக்குத் தாயான ஒருவர் கல்லூரியில் படிக்கும் ஷாமிலிக்கு நண்பர் என்பது, அவ்வளவு ஸிட்ரிக்ட்டான ஸ்ட்ராங்கான ஷாமிலி சட்டென சித்தார்த்தை வாரிசாக இன்ஸுரன்சில் போடுவதும், அவரோடு காசிக்கு கிளம்புவதும், கிடைக்கும் காசுக்கு ஆசைப்படுவதும், ஹெலிகாப்டரில் ஏறுவதும், பணத்தை பறக்க விடுவது என பலகீனமான சமாச்சாரங்கள் நிறைய நிறைய உண்டு.

படத்தில் ஷாமிலியின் வீட்டுப் பிரச்னையை சித்தார்த் தீர்த்து தான் மிகப் பணக்காரன் என்பதை எல்லாம் மறைப்பதை எல்லாம் பார்க்கும் போது கஜினி ஞாபகத்திற்கு வருவதையும்  கிளைமாக்ஸில் பெஞ்சில் சித்தார்த் பழைய கதையை சொல்லி ஷாமிலியின் நினைவாய் மழைக்கு காத்திருக்கும் போது 7 ஜி ரெயின்போ காலனி நினைவுக்கு வருவதும் தவிர்க்க முடிவதில்லை. சோகமான முடிவின் காரணமாய் மனம் கனமாவுதும் தவிர்க்க முடிவதில்லை.

பி.கு
படத்தில் ஷாமிலி சித்தார்த்தை கூப்பிடுவது எல்லாம் ஓய் ஓய் என்று தான்! ஒரு நிமிடம் என்னையும் யாரோ ஓய் என கூப்பிடுவது போலத் தோன்றுகிறது!

Thursday, November 25, 2010

கிக்கில்லாத தில்லாலங்காடி

பெரும்பாலும் படங்கள் பார்க்கும் போது, பேக் கிரவுண்ட்டில் போட்டு விட்டு, வசனம் மட்டும் கேட்டுக் கொண்டு, வேறு வேலை செய்வது தான் வழக்கம்..

அப்படித்தான் இந்த கிக் படமும். தமிழில் தில்லாலங்கடி என வந்தப் படம் தான். சக அறைவாசிகள் அறையில் அலற விட்ட போது பார்க்க நேர்ந்தது. போலி சரக்கை விட ஒரிஜினலில் தான் கிக் அதிகம் என அரையும் குறையுமாக தமிழில் பார்த்ததை தெலுங்கில் ஆசை தீர பார்க்க முடிவு செய்தேன்.[அதுவும் பாலகிருஷ்ணா நடித்த சமரஸிம்ஹ ரெட்டி போன்ற படங்களைப் பார்த்தால் நிச்சயம் கிக் ப்ராப்திரஸ்து]

படத்தை ஓட விட்டு வேறு ஏதோ நோண்டிக் கொண்டிருக்க என்னடா ஏதும் சத்தம் வராமல் இருக்கிறது அதுவும் தெலுங்கு சினிமாவில் ஆரம்பத்தில் அமைதியா என அதிர்ச்சியான ஆச்சரியம் ! ஹீரோவுக்கு இப்படி ஒரு ஓபனிங்கா எனப் பார்த்தால் அது ஹீரோயினின் ஓபனிங். இலியானா யோகா செய்வதைப் பார்த்தால் நமக்கு மன அமைதி கெட்டு விடுகிறது.[கடைசியில் பேர் போடும் போது கூட மீண்டும் இலியானா யோகா செய்வதை காட்டுகிறார்கள், சில்பாவிற்கு போட்டி ரெடி] தமிழ் 3 இடியட்ஸிற்கு அவருக்கு ஏன் 1.5 கோடி என இதைப் பார்த்தால் புரியலாம். தெலுங்கு போக்கிரியில் பார்த்திருந்தாலும் இதில் பல மடங்கு பளிச்சிட்டது போல் பட்டது.

இரவி தேஜா! கல்லூரியில் முதன் முதலாக இவர் நடித்த இடியட் படத்தை பார்த்த போதிலிருந்ந்தே அவர் நடிப்பின் மீது ஒரு பிடிப்பு. அதுவும் அந்த படம் தான் தமிழில் சிம்பு நடித்த தம் என தெரிந்தவுடன் ரவி தேஜாவின் நடிப்பின் மீது அபார மதிப்பு! இதிலும் பட்டையைக் கிளப்புகிறார்.

இரண்டிலும் ஷ்யாமுக்கு ஒரே கதாப் பாத்திரம்.கனகச்சிதம்.தமிழில் தமன்னா, சந்தானம், லிவிங்சடன், பிரபு, சுஹாசினி ஆகியோர் தெலுங்கை விட சிறப்பாகச் செய்திருக்கின்றனர். வடிவேலு உட்பட மற்றவர்கள் எல்லாம் வெத்து தான்.
   
காமெடிக் காட்சிகளுக்கு தமிழில் மெருகூட்டியவர்கள் திரைக்கதையிலும் மெனக்கெட்டியிருக்கலாம். கதாநாயகனின் இரண்டு முகங்களும்[காதலன், கள்வன்] ஓன்றன் பின் ஓன்றாக காட்டியிருப்பதை தமிழில் மாற்றி மாற்றி காட்டி விறுவிறுப்பு காட்டியிருக்கலாம்

பெரும்பாலான தெலுங்கு படங்கள் தமிழ் நடிகர்களுக்குப் பொருந்துவதில்லை.அதுவும் அப்படியே காட்சிக்கு காட்சி காப்பியடிக்கும் போது! .ஒரே மாதிரி ஒலிக்கும் சில வார்த்தைகள் வெவ்வேறு மொழிகளில் வெவ்வேறு பொருள் படும். படங்களும் அப்படித்தான். பெரும்பாலான படங்கள் தெலுங்கில் பார்க்கும் போது திவ்யமாகவும் தமிழில் திராபையாகவும் இருக்கிறது.

Monday, November 15, 2010

மகதீரா

தான் ஆடாவிட்டாலும் தன் சதை ஆடும் என்னும் சொல்லிற்கேற்ப தெரிந்தோ தெரியாமலோ தெலுந்கு படங்களின் மீது அதீத பைத்தியம். தமிழில் தெரியும் அபத்தங்கள் தெலுங்கில் கண்ணுக்குப் படுவதில்லை. பட்டாலும் கண்டு கொள்வதில்லை.

அப்படியிருந்தும் கூட ராம்சரண் தேஜா நடித்த சிறுத்தாவைப் பார்த்து சிதறிப் போயிருந்தேன். அதன் காரணமாக ஆஹா ஒஹோ என்று
ஊரெல்லாம் புகழ் பாடியிருந்தும் அந்த மூஞ்சியைப் பார்க்க வேண்டுமா என மகதீரா பார்ப்பதை தள்ளிப் போட்டுக் கொண்டு இருந்தேன்.

கதாநாயகியும் கதாநாயகனும் மலையுச்சியிலிருந்து செத்துப் போகும் ஆரம்ப காட்சியில் இருந்தே அதகளம் தான்.

தெலுங்கு சினிமாவிற்கு தெலுங்கில் பெயர் வைக்கிறார்களோ இல்லையோ தெலுங்கில் டைட்டில் வைக்கிறார்களோ இல்லையோ பிரம்மானந்தம் இருப்பார் இதிலும் இருக்கிறார். ஆனால் காமெடி தான் இல்லை. படத்திற்கு அதன் தேவையும் இருப்பதில்லை மீனா குமாரி புகழ் நடிகையின் குத்தாட்டமும் உண்டு. கிராபிக்ஸ் புண்ணியத்தில் சிரஞ்சிவியின் பழைய டான்ஸும் உண்டு. ராம் சரண் தேஜாவும் டான்ஸில் குறை வைப்பதில்லை. எந்த தெலுங்கு ஹீரோவும் டான்ஸில் குறை வைப்பதில்லை.

இரண்டு கதாநாயகிகளில் ஒரு கதாநாயகியின் கனவில் கதாநாயகன் மற்றொரு கதாநாயகியுடன் ஆட்டம் போடுமாறு காட்சியமைக்கும் தெலுங்கு சினிமாவில் குத்தாட்ட நடிகை கூட கதாநாயகியாக தோன்றும் புரட்சியான சமாச்சாரம் எல்லாம் உண்டு

காஜல் கண்ணுக்கு குளிர்ச்சியாக! ஹும்! அதுவும் காஜலின் துப்பட்டா தனி காரெக்டர். படத்தின் பல திருப்பங்களுக்கு துப்பட்டா தான் காரணம்!

ஆசைப் பட்டால் அடைய வேண்டும் இல்லையெல் அழித்து விட வேண்டும் என்னும் பவர் புல் வில்லன்.  இவரைப் போய் சுறாவில்  அவ்வளவு சின்னபுள்ளத் தனமாக காட்டிவிட்டார்களே என்ற வருத்தம் வராமலில்லை.

கெட்டவனும் நல்லவனும் ஒரு பெண்ணைக் காதலிக்க நல்லவன் பெண்ணை கைப்பிடிக்கும் காய்ந்து கருவாடான கதை என்று ஒதுக்கித் தள்ள முடியாத அளவு திரைக்கதையில் தூள் கிளப்பி இருக்கிறார்கள்.

அதுவும் ஒரே கதையை ஒரே படத்தில் இரு ஜென்மம் என சலிக்க வைக்காமல் இருமுறை காட்டுவதில் பின்னி பெடலெடுக்கிறார்கள்.அதுவும் ஒரு சில காட்சிகளை மூன்று முறை எல்லாம் காட்டியும் கடுப்பாக இருப்பதில்லை.

இருஜென்மங்களிலும் வில்லன் ஈட்டி எறிவதில் கில்லியாக இருப்பது, கதாநாயகியின் தந்தையைக் கொல்வது, என பல இடங்களில் இரு ஜென்மங்களுக்கும் தொடர்பு வைத்து திரைக்கதை அமைத்திருப்பதை பாராட்டியே ஆக வேண்டும்.

கிளைமாக்சில் ஹெலிகாப்டரை கார் மூலம் காலி செய்வதைப் பார்க்கும் போது டை ஹார்ட் 4 நினைவில் வந்து போகிறது.

ஆரம்பம் முதல் கிளைமாக்ஸ் வரை வந்தும் கதைப் பற்றி சொல்லவில்லையே எனக் கேட்பவர்களுக்காக
இந்த ஜென்மத்தில், ஒரு ஸ்பரிசத்தில் முன் ஜென்மவாசனையை முகர்ந்து முகம் கூட பார்க்காமல் காதலில் விழும் கதாநாயகன்.

முன் ஜென்ம வாசனை எதுவும் இல்லாமல் காதலில் விழும் கதாநாயகி.

 பழி வாங்க வந்த இடத்தில் காதலில் விழும் வில்லன்.
காதலில் விழுந்த கணமே தந்தையைக்  கூட காலி செய்யும் தன்னால் அவளை தீண்டக் கூட முடியாத காரணத்தை தேடிச் செல்லும் வில்லன் முன் ஜென்ம கதையை அறிந்துக் கொள்கிறார்.

வாசனையை மட்டுமே முகர்ந்த கதாநாயகன், முன் ஜென்மத்தில் உயரத்திலிருந்து விழுந்ததைப் போல இந்த ஜென்மத்திலும் விழும் போது எல்லாக் கதையையும் நினைவுக்கு வருகிறது.
முன் ஜென்மத்தில் ஷெர் கான்னாக இருந்து கதாநாயகனின் சாவுக்கும் காதலை பிரிப்பதற்கும் காரணமாக இருந்ததை நினைத்து வருந்துபவர் சாலமனாக இந்த ஜென்மத்தில் கதாநாயகனின் உயிரைக் காப்பாற்றி காதலை சேர்ப்பதற்கும் உதவுகிறார்.

இதனிடையே வில்லனின் வில்லத் தனத்தால் கதாநாயகனை வெறுக்கும் கதாநாயகிக்கு பூர்வ ஜென்ம ஞாபகத்தை வரவைக்க அதே இடத்திற்கு கதாநாயகியைத் தூக்கி சென்று முன் ஜென்மத்தில் வில்லனைக் கொன்ற அதே கத்தியைக் கொண்டு சண்டையைப் போடுகிறார். காதலிக்கும் முன் ஜென்ம வாசனை வந்து விடுகிறது.

முன் ஜென்மத்தில் கதாநாயகியைக் கொன்றதைப் போல இப்பொழுதும் கொல்ல வில்லன் நினைக்க , முன் ஜென்மத்தில் செய்த தவறை மனதில் வைத்து முன்னெச்சரிக்கையாக வில்லனைக் கொன்று காதலியைக் காக்கிறார் கதாநாயகன்.

இதைப் படித்தப் பின். “இப்பொழுது நான் இருப்பது முன் ஜென்மமா என்ன ஜென்மம்” என்ற சந்தேகம் வந்தால் படத்தைப் பார்த்து தெரிந்துக் கொள்ளவும். இப்படி குழப்பமான கதையை தெள்ளத் தெளிவாக எடுத்திருக்கிறார்கள்.

மகதீரா ஒரு மிஸ் செய்யக் கூடாத படம்!

Saturday, November 13, 2010

The Social Network

Though it is touted as the story of the facebook, a technological start up blah blah, to me It is all about humans and human feelings-hatred, revenge, greed, anger, betrayal friendship and above all Love.

It took me for a while to get that, the story is being told via depositions in two lawsuits.

The actors each and every one of them have done a good job. They bring the characters so alive, an exceptional feat considering the fact no actor has met their real life characters except for Justin Timberlake who has met Sean Parker.

The movie is based on Ben Mezrich's Accidental Billionaires. Inspite of me having read the book more than once and most of the dialogues were from the book, Still i liked the dialogues in the movie.

Though the book seems more like a hatchet job on Mark Zuckerberg and movie is based on the book, I would say it pays tribute to Mark.

It shows him as a mere human mortal, who watches out for his friends, who is passionate about what he does and more especially vulnerable.

It also subtly hints that the man who created the social network of the world helping friends to keep in touch is lonely,very lonely which could probably be true.

You couldn't help feeling sorry for the youngest billionaire, when he sends a friend request to the girl with whom he breaks up in the beginning of the movie. IMHO, Probably, if not for her, We would have never had Facebook! [Only to take his mind off from her break up, Mark did create Facemash and one thing led to the other and the rest is the living present that we are witnessing]

I also did cover this movie sometime back here http://www.tamilpaper.net/?p=533